tamilnadu

img

வங்கி அதிகாரிகள் - ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சிஐடியு ஆதரவு

புதுதில்லி, செப்.21- பொதுத்துறை வங்கி அதி காரிகள் - ஊழியர்கள் மேற் கொள்ளும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு சிஐ டியு முழு ஆதரவு தெரிவித் துள்ளது. வரும் செப்டம்பர் 26-27 ஆகிய இரு நாட்களுக்கு நாட் டில் இயங்கும் வங்கி அதி காரிகளின் நான்கு சங்கங்க ளும் இணைந்து அறைகூவல் விடுத்திருக்கின்றன. பொதுத் துறை வங்கிகளை அழித்து ஒழிக்கவேண்டும் என்ற நோக் கத்துடன் மத்திய அரசாங்கம் பல வங்கிகளை இணைப்ப தற்கும், வங்கித்துறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்வ தாகக்கூறி மக்கள் மீது சுமை களைத் திணித்திடவும் மேற் கொண்டுள்ள முடிவுகளைக் கண்டித்தே வங்கி அதிகாரி கள் வேலைநிறுத்தத்தில் ஈடு படுகிறார்கள்.\

வங்கிகளில் இயங்கும் ஊழியர்களின் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தில் இணைந்துகொள்ள முடிவு எடுத்துள்ளன. மத்திய அரசின் நாசகர முடிவுகளுக்கு எதிராக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் மேற்கொள்ளவிருக் கும் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்தியத் தொழிற்சங்க மையம் தன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மத்திய பாஜக அரசாங்க மும், தனியார் கார்ப்பரேட்டு களும் கள்ளப் பிணைப் பினை ஏற்படுத்திக்கொண்டு, பொதுத்துறை வங்கிகள் மீது ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும், பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாத்திட வும், நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு இடையிலான வலைப்பின்னலைப் பாது காத்திடவும் வங்கி அதிகாரி கள் மற்றும் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் இவ்வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு சிஐடியு தன் முழு ஆதரவினையும் அளித்துள்ளது. வங்கி அதி காரிகள் – ஊழியர்கள் மேற் கொள்ளும் போராட்டங்க ளுக்கு தொழிலாளர் வர்க்கம் ஒருமைப்பாட்டைத் தெரி விக்க வேண்டும் என்றும் சிஐ டியு அறைகூவல் விடுத்திருக் கிறது.  

           (ந.நி.)

;